இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்! பயன்படுத்திக் கொள்ளுங்கள்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்கின்றார்.
மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலை கடைகளில் மட்டுமே நியாய விலை பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.திடீரென்று வெளிமாவட்டத்திற்கு, அல்லது வெளி மாநிலத்திற்கு குடியேறுபவர்கள்,நியாய விலை பொருட்களை பெறுவதில் சிக்கல் நிலவிவந்தது.இதனை சரிசெய்யும் வகையிலும் அனைவருக்கும் நியாயவிலைப் பொருட்கள் கிடைக்கும் வகையிலும் மத்திய அரசு “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை கொண்டு வந்தது.
ஏற்கனவே தமிழகத்தில் கைரேகை மூலம் நியாய விலை பொருட்கள் வாங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசு,மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைக்கின்றார்.
இந்த திட்டத்தின் மூலம் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி கோதுமை உள்ளிட்ட நியாயவிலைப் பொருட்களை எளிமையாக வாங்கி கொள்ளலாம்.
இந்த திட்டமானது சேலம்,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி,கோயமுத்தூர், சிவகங்கை,திண்டுக்கல்,கடலூர், ராணிப்பேட்டை,புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி,தென்காசி, விழுப்புரம்,கன்னியாகுமரி, செங்கல்பட்டு,வடசென்னை, தென்சென்னை,காஞ்சிபுரம், திருவாரூர்,தேனி,நீலகிரி, நாமக்கல்,வேலூர்,திருப்பூர், கரூர்,நாகப்பட்டினம்,அரியலூர், பெரம்பலூர்,திருச்சி ஆகிய 32 மாவட்டங்களில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமுலுக்கு வருகின்றது.